சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.ஜே. அகம்மது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரகுமான் சிறப்புரையாற்றினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சித்திக் குலாம்தாதர், சமீல், தாஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0
0
0
0
0
0