நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் முக்கியத் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வந்தார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் முக்கியத் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது, நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். அதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. மேலும், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0
0
0
0
0
0