சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற கட்டடமான CITIC Tower-இல் சற்றும் எதிராபாராத விதமாக ஒரு சிறிய ரக விமானம் மோதிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற நாடுகளை போல் அல்லாமல் சீனாவில் மிகவும் கடுமையான வான்வெளி பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தாண்டி இப்படியொரு விபத்து நிகழ்ந்திருப்பது, அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை, திட்டமிட்ட விமானப் பாதையில் இருந்து வெளியேறிய ஒரு சிறிய ரக விமானம், பெய்ஜிங் மத்திய வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள 108 மாடிகள் கொண்ட CITIC Tower (China Zun) கட்டடத்தின் மேல் பகுதியில் மோதியது.

விமானம் மோதியதால் கட்டடத்தின் உயரமான தளங்களில் கண்ணாடி சுவர்கள் உடைந்து சேதமடைந்தன. மோதிய வேகத்தில் விமான இரண்டாக உடைந்தது, இதன் பின்பு விமானத்தின் பாகங்கள் கீழே சிதறி விழுந்ததுள்ளது. கீழே விழுந்த பாகங்கள் கார் மீது விழுந்து சேதம் அடைந்தது. மேலும் கட்டடத்தின் அடிப்பகுதியில் புகை எழுந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கட்டடம் சீனாவின் முக்கிய வர்த்தக அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் விமானம் மோதிய செய்தி சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் டிவின் டவர் விபத்து போலவே இருந்துள்ளதால், சீன மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
1
0
0
0
1
2