தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்ப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் அலெக்ஸ்பாண்டி அதிர்ஷ்ட லட்சுமி தம்பதியினர். இவர்களது 10 மாத ஆண் குழந்தை தருனேஷ் கையில் வைத்து விளையாடி கொண்டிருந்த தலைவலி டப்பா மூடியை விழுங்கி மூச்சுவிட முடியாமல் அழுது துடித்துள்ளது. உடனடியாக குழந்தையை தஞ்சை அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் குழந்தையின் உணவு குழாயின் மேல் பகுதியில் மூடி சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்
உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் அறுவை சிகிச்சை இல்லாமல் மூடியை உணவு குழாயில் இருந்து அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.
இதுக்குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் 3 செ.மி உள்ள மூடியை மருத்துவ குழுவினர் துரிதமாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்யாமல் அகற்றிய மருத்துவக் குழுவினரை பாராட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் கையில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை தரக்கூடாது. பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் ரெரிவித்தார்.
தங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்றி கொடுத்த மருத்துவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.