உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டி எழுப்பிய  இராஜராஜ சோழனின் 1038ம் ஆண்டு சதய விழா  நடைபெறுவதை முன்னிட்டு பெருவுடையார் கோவில் வளாகம், ராஜராஜ சோழன் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் வளாகம் தங்கம் போல் ஜொலிக்கின்றன. இவ்விழாவின் காரணமாக தஞ்சை நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

தமிழர்களின் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் பிறந்த தினத்தை அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1038ம் ஆண்டு சதய விழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.
0
0
0
0
0
0