மயிலாடுதுறையில் தேவாரப் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் மூன்றாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.

தினம் தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சகஸ்ரநாம அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மண்டலபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு இரு தினங்களுக்கு துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஷோடச உபசாரங்களுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் திரளான பக்தர்கள் பங்கற்று சுவாமி தரிசனம் செய்தனர்
0
0
0
0
0
0