தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கும்பகோணம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் கும்பகோணம் மாநகராட்சி சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதனை வலியுறுத்தி கும்பகோணத்தில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் இணைந்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மாவட்ட ரெட்கிராஸ் துணை தலைவர் பொறியாளர் முத்துக்குமார், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், நகர்நல அலுவலர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ முன்னிலையில், நேரு யுவகேந்திரா கணேசன்  ஒருங்கிணைப்பில் பேரணி நடைபெற்றது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம், இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியிலிருந்து NSS, YRC, மாணவ, மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, மாசில்லா தஞ்சை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட சீருடை அணிந்து சைக்கிள் பேரணியில் பங்குபெற்றனர்.

மேலும் கல்லூரியை சார்ந்த NSS,YRC ஒருங்கிணைப்பாளர்கள், கும்பகோணம் ரெட்கிராஸ் தொண்டர்கள், தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1
0
0
0
0
0