தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில், அதிகாலை முதல் இரவு வரை வேதமந்திரங்கள், திவ்யபிரபந்தம் மற்றும் பக்தி பாடல்கள் ஒலிப்பரப்பு செய்திட வலியுறுத்திய பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், கும்பகோணம் ஸ்கைவின் குழுமத் தலைவருமான மோகன் மற்றும் அறங்காவலர்கள் எற்பாட்டில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு திருக்கோயில் வளாகத்தில் 42 இடங்களில் ஒலிப்பெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.



மேலும் அருள்மிகு வெங்கடாஜபதி சுவாமி தரிசனம் முடித்து வெளியே செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் மற்றும் லட்டு வழங்கும் பணிகளையும் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி.கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர், மாவட்ட திமுக பிரதிநிதி டி.என்.கரிகாலன், செயல் அலுவலர் சாந்தா, திருக்கோயில் அறங்காவலர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன், இளங்கோவன், மகேஸ்வரி துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
2
0
0
0
0
0