தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்த டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா அறிவுறுத்தலின்படி

டெல்டா கூட்டமைப்பின் தலைவர் முகமது சுகைல் ஆணைக்கிணங்க செயலாளர் செவன் லெவன் உதயகுமார், பொருளாளர் ரகுராமன், கௌரவத் தலைவர் அசோகன் ஆகியோர் தலைமையிலும் டெல்டா கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஜமால் முகமது, பாரதி, ராஜா மைதீன், சரவணன், ரவிச்சந்திரன், அக்பர் அலி, பிரபாகரன், கரிகாலன், குமார், கருணாகரன், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், செய்தி தொடர்பாளர் லுக்மான் உமர் முன்னிலையில் திருவிடைமருதூர் மகாலிங்கம் நகரில் கூட்டம் போடப்பட்டு சோழபுரம், தத்துவாஞ்சேரி, பந்தநல்லூர், அணைக்கரை மற்றும் பல கிளை சங்க வணிக உறுப்பினர்களுக்கு இலவச விபத்து மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது. மேலும் தத்துவாஞ்சேரியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் வரும் வாரத்துக்குள் வேலை முடிக்கப்பட்டு இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.