தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி வளாகத்தில் இன்று தஞ்சாவூர் மக்கள் தொடர்பகத்தின் சார்பில், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான 5 நாட்கள் டிஜிட்டல் மற்றும் புகைப்பட கண்காட்சி தொடங்கியது

இதனை தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சித்தலைவர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மண்டல இயக்குனர் ஜே.காமராஜ், திருச்சி மத்திய மக்கள் தொடர்பு அலுவலர்கள் தேவி பத்மநாபன், ரவீந்திரன், ஜெயகணேஷ், ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறுதானிய ஆண்டு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பேச்சுப் போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
                           

நிகழ்ச்சியில் இதயா கல்லூரியின் முதல்வர் முனைவர் யூஜின் அமலா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் குணசேகரன், நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் அலமேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சியில் இந்திய அஞ்சல் துறை, காசநோய் பிரிவு, தொழுநோய், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சித்தா, கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் ஆகிய அரசின் துறை சார்ந்த பல்வேறு அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன, மத்திய அரசின்  திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
0
0
0
0
0
0