தஞ்சாவூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. துணை காவல் கண்காளிப்பாளர் மகேஷ்குமார் அவர்கள் மாரத்தான் போட்டியை தலைமையேற்று சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.



கும்பகோணம்  உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலிருந்து துவங்கி, தஞ்சாவூர் மெயின் சாலை வழியாக துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாரத்தான் போட்டி நிறைவுபெற்றது. போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பையுடன் சான்றிதழும், கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியில் கும்பகோணம் ரெட்கிராஸ் துணை சேர்மன் ரொசாரியோ முன்னிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் அவர்கள் சாதனை பெண்மணிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கி கௌரவித்தார்.


கும்பகோணம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் ஒருங்கிணைப்பில் போட்டி நடைபெற்றது. இதில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கணேசன், சிவக்குமார், ராமதாஸ், சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

2
0
1
0
0
0