தஞ்சாவூர்: சுவாமிமலை அருகிலுள்ள வளையப்பேட்டை, மல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் அபிராமி(வயது 22).நேற்று இவர் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பஞ்சமூர்த்தி மகள்கள் மீரா(23), கீர்த்திகா(20), ரத்தினம் மகன் பாலா (28), சுபாஷ்சந்திரபோஸ் மகன்கள் ஹரிஹரன்(25), சந்தோஷ்(22) ஆகிய 6 பேருடன் அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். 

அப்போது அபிராமி மற்றும் மீரா ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் 2 பேரும் ஆற்றில் மூழ்கி மாயமானார்கள்.இதைக்கண்ட பாலா அவர்களை மீட்க முயற்சி செய்தார். அப்போது அவரும் ஆற்றில் மூழ்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் பாலாவை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மாயமான அபிராமி மற்றும் மீராவை தேடினர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆற்றில் இருந்து அபிராமியை போலீசார் பிணமாக மீட்டனர். ஆற்றில் மூழ்கிய மீராவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆற்றில் மூழ்கி பெண் பலியான சம்பவம் சுவாமிமலை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

3
0
0
0
0
0