தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தவறாமல் கிராமசபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில், ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஐல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மற்றும் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் இனி வரும் காலங்களில் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வாழ்த்துக்கள் ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி தாராசுரம்