மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு தன்னர்வலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. முகாம் நடைபெறுவதற்கு முன்னேற்பாடாக இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு கண்காணிப்பு அலுவலர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமார், குத்தாலம் வட்டாட்சியர் இந்துமதி, தனி வட்டாட்சியர் சண்முகம், மண்டல துணை வட்டாட்சியர் ராஜன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வைத்தியலிங்கம், இல்லம் தேடி கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, பயிற்சியாளர்கள் ஆயிஷா சப்பிரின், சத்தியா, மீனா, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0
0
0
0
0
0