மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இதில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். 

ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயதில் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு குறைகள் மற்றும் தேர்வு செய்யப்படாத பட்டியல்களை தேர்வு செய்ய வேண்டும், கொரோனா கால மருத்துவ பட்டியல்களை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

0
0
0
0
0
0