மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி மாம்புள்ளி கீழத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் செல்வம் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மின் கசிவினால் எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்து வீடு முழுவதும் சேதமானது. இதில் வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குத்தாலம் ஒன்றிய குழுத்தலைவர் மகேந்திரன் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட செல்வத்தின் குடும்பத்துனருக்கு ஆறுதல் கூறி நல உதவிகளை வழங்கினார்.



திருவாலங்காடு ஊராட்சி மன்ற 
தலைவர் கதம்பவள்ளி சின்னையன், திமுக ஊராட்சி செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் இராஜவள்ளி பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரி சண்முகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
0
0
0
0
0
0