டெல்டா மாவட்டங்களிலும், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் வரும் 19ஆம் தேதி ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ காற்று, வெப்பச்சலனம் காரணமாக 5 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 20ஆம் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 
0
0
0
0
0
0