சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் உள்ள காமராஜர் திடலில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது, விழாவிற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.பி.அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் அன்பழகன், தசரதன், வட்டார தலைவர் அன்புதாஸ், மாவட்ட பொது செயலாளர் மஸ்கர் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஜாபர்அலி அனைவரையும் வரவேற்றார். 
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை விளக்கி பேசினார். முன்னதாக வந்தவாசி சாலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்து வைத்து காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு முககவசம், கிருமிநாசினி, ஆகியவற்றை வழங்கினார். விழாவில் மாவட்ட ஒன்றிய, நகர, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
0
0
0
0
0