முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பீர்’ என்று தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு போராடி வருகிறது. கொரோனா பரவல் தற்போது மிகவும் மோசமாக உள்ளது. 2 வாரத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். முழு ஊரடங்கை பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்துவோம். முழு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள பொருட்களை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
0
0
0
0
0
0