கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் உலக புராதன சின்னமான ஐராவதேஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீரபத்திர சுவாமி கோவிலில் பாலாலய விழா நடைபெற்றது.

கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்திற்கு சொந்தமான இந்த கோவில் பஞ்ச குரோச தலம் என்ற சிறப்பு பெற்றுள்ளது. பத்ர காளியம்மன் சமேத வீரபத்திர சுவாமி பரிவார சன்னதிகளுடன் அருள்பாலிக்கிறார். இத்தலம் பித்ரு தோஷ பரிகார தலமாகவும், ஒட்டக்கூத்தர் ஜீவ சமாதி அமைந்த தலமாகவும் போற்றப்படுகிறது.

இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் புதிதாக கட்டுமான பணி செய்து திருப்பணி திருப்பணி செய்வதென முடிவு செய்யப்பட்டு, ஆன்மீக அன்பர்கள், சமய சான்றோர்கள், கவிச்சக்கரவர்த்தி, ஒட்டக்கூத்தர் ஆன்மீக கல்வி அறக்கட்டளை, ஆலய திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் கைங்கர்யத்துடன் பாலாலயம் செய்யப்பட்டது. 
4
0
3
1
0
1