கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகை ஊராட்சியில் 
தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தலைமை தாங்கினார். திமுக கும்பகோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாராசுரம் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

மேலும் ஒன்றிய பொறுப்புக்குழு பொறுப்பாளர் சோழன்மாளிகை இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் தேவி இளங்கோவன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கும்பகோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாராசுரம் அசோக்குமார் நெல் ஈரப்பதத்தை கண்டறியும் இயந்திரத்தில் பரிசோரனை மேற்கொண்டார். மேலும் அங்கு பணிபுரியும் சுமை தூக்கும் பணியாளர்களிடம், அங்கு நடைபெறும் பணிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது அங்கு வந்திருந்த விவசாயிகள் மூன்றாம் போகத்திற்கு தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்ததற்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக கும்பகோணம் தெற்கு ஒன்றிய செயலாளரிடம் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
3
0
0
0
0
0