மாவட்டங்களுக்கு ஆய்விற்காக வரும் போது ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம், சாதாரண உணவே போதும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தலைமை செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், ‛‛ நான் எழுதிய புத்தகங்களை எந்த அழுத்தம் வந்தாலும் நான் தலைமை செயலராக இருக்கும் வரை எந்த திட்டத்தின் கீழும் அரசு சார்பில் வாங்கக்கூடாது'' என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்! ஆய்விற்காக மாவட்டங்களுக்கு வரும் போது. சாதாரண காலை மற்றும் இரவு உணவுகளுடன் மதியம் இரண்டு காய்கறிகளுடன் சைவ உணவை மட்டும் ஏற்பாடு செய்தால் போதுமானது. ஆடம்பர உணவுகளை தவிர்த்து விடுங்கள். அது எனக்கு சரிப்பட்டு வராது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
0
0
0
0
0
0