தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கை, சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க மருந்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற 7-ந் தேதியுடன் முடிவடைகிறது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிப்பதா? அல்லது தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர் குழு, தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஜூன் 14ஆம் தேதி வரை, தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மற்றும் டீக்கடைகளுக்கு தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் தொற்று பாதிப்பு குறையாத மாவட்டங்களில் எந்தவித தளர்வுகள் இன்றி முழுஊரடங்கு தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5
0
0
0
0
0