கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட தஞ்சை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக தமிழக முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பாபநாசம் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை, பாபநாசம், கபிஸ்தலம், சுவாமிமலை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை 30 ஆயிரம் தடுப்பூசிகள் வருவதாகவும் தெரிவித்தார்
இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்,பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம், அரசு கொறடா கோவி செழியன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.