தத்துவமசி சொல்லும் தத்துவம்
மகா வாக்கியம் :
ஐயப்பன் கோவிலில் 18 படிகளுக்கு மேல், தத்துவமசி என்ற மகா வாக்கியம் எழுதப்பட்டுள்ளது. இதை தத்-துவம்-அஸி என பிரித்து படிக்க வேண்டும். " நீ எதை தேடி வந்தாயோ அது உன்னிடமே உள்ளது" என்பது தான் இதன் பொருள். ஐயப்பன் என்ற சொல்லுக்கு நான் உனக்குள் இருக்கிறேன் என்பது தான் பொருள். அனைத்து ஆன்மாவோடு கலந்துள்ள இறைவனை உணர்ந்து, இறை நிலைக்கு மனிதன் உயர வேண்டும் என்ற மகா தத்துவத்தை உணர்த்துவது தான் ஐயப்ப விரத மற்றும் வழிபாட்டின் முக்கிய அம்சமாகும்.

கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது எனவும் மரகதக்கல் கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இரு வேறு கருத்துகள் உள்ளன.

தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளிலும் 18 தேவதைகள் அருள் செய்கின்றன. இந்த 18 படிகளும் வாழ்க்கை மற்றும் 18 வகையான குணங்களை குறிப்பதாகவும், இவற்றில் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை சேர வேண்டும் என்பதே 18 படிகளின் தத்துவம். 18 படிகளில் ஏறும் போது, 18 படிகளை கடந்த ஐயப்பனை தரிசிக்கும் போதும் என்ன வேண்டிக் கொள்கிறோமோ அது அப்படியே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 18 படிகள் உணர்த்தும் தத்துவம்.

முதல் படி - பிறப்பு நிலையற்றது

இரண்டாம் படி - சாங்கிய யோகம்

மூன்றாம் படி - கர்ம யோகம்

நான்காம் படி - ஞான யோகம்

ஐந்தாம் படி - சன்னியாசி யோகம்

ஆறாம் படி - தியான யோகம்

ஏழாம் படி - ஞான விஞ்ஞான யோகம்

எட்டாம் படி - அட்சர பிரம்ம யோகம்

ஒன்பதாம் படி - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

பத்தாம் படி - விபூதி யோகம்

பதினொன்றாம் படி - விஸ்வரூப தரிசன யோகம்

பன்னிரெண்டாம் படி - பக்தி யோகம்

பதிமூன்றாம் படி - சேஷத்ர விபாக யோகம்

பதினான்காம் படி - குணத்ரய விபாக யோகம்

பதினைந்தாம் படி - புருஷோத்தம யோகம்

பதினாறாம் படி - தைவாசுரஸம்பத் விபாக யோகம்

பதினேழாம் படி - ச்ராத்தாதரய விபாக போகும்

பதினெட்டாம் படி - மோட்ச சன்னியாச யோகம்

ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டல கால விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து ஒவ்வொரு படிகள் மீது ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.

11
17
3
1
0
0