கும்பகோணம்: தலைக்கவசம் அணிவதன் அவசியத்தையும், பொதுமக்கள் தலைகவசம் அணிந்து செல்ல வலியுறுத்தியும், கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை சார்பில் பிப்ரவரி 14ம் தேதி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சரவணக்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில், மாபெரும் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி நடைபெறுகிறது. 

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி நால்ரோடு, பழைய மீன் மார்க்கெட், செல்வம் தியேட்டர், பழைய ராமன் & ராமன், உச்சி பிள்ளையார் கோயில், TSR பெரிய கடை வீதி, காந்தி பார்க், மடத்து தெரு, பாலக்கரை வழியாக சென்று, கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பூர்ணிமா, துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர், கும்பகோணம் நடுவர், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை திருமதி.சண்முகப்ரியா அவர்கள் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்.

இந்த பேரணியில் கும்பகோணம் ரெட் கிராஸ், இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தினர், ரோட்டரி கிளப் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் பலரும் கலந்து கொள்ள இருப்பதால், ஆர்வமுள்ள அனைவரும் பங்குபெற வேண்டுமென கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு: 8838923201
1
0
0
0
0
0