மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியூசி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் திர்ளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

தொடர்ந்து ஒப்பந்த முறையில் ஆட்களை தேர்வு செய்வதை முழுமையாக கைவிட கோரியும், திடக்கழிவு மேலாண்மை விதிகள், குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளில் வெளிச்சந்தை முறையை புகுத்துவதை தடுக்க கோரியும், குறைந்தபட்ச ஊதியத்தை குறைத்து வழங்குவதை கண்டித்தும், நிரந்தர தொழிலாளர்களை மாற்றுப் பணிக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த, தினக்கூலி போன்ற பெயர்களின் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணியை விட்டு அனுப்பும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
0
0
0
0
0
0