மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறை குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் 100% மானியத்தில் இரசாயன உரங்கள் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. 

இவ்விழாவிற்கு திருவாலங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கதம்பவள்ளி சின்னையன் தலைமை வகித்தார். திமுக ஊராட்சி செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் இராஜவள்ளி பாலமுருகன் முன்னிலை வகித்தனர். திருவாலங்காடு கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளார் குமரா.வைத்தியநாதன், கலந்து கொண்டு பயனாளிகளுக்கு 100% மானியத்தில் இடுபொருட்கள் வழங்கினர். 

இந்நிகழ்வில் குத்தாலம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்லக்குட்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜவள்ளி பாலமுருகன், ஜி.டி.ராஜா, குத்தலாம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் எல்.டி.சி செந்தில், உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1
0
0
0
0
0