தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர்.



இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 19 ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக குழந்தைகளை இழந்த குடும்பத்தினர் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர் தூவி, மாலை அணிவித்து, புத்தாடைகள் வைத்து குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.



பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.





மேலும் கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் பாலக்கரையில் உயிரிழந்த 94 பள்ளி குழந்தைகளின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
2
0
0
0
0
0