தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 10 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (16.07.2023) நடைபெற்றது. இவ்விழாவிற்கு அன்னை கல்வி குழுமத்தின் தாளாளர் மு.இ.அப்துல் கபூர் தலைமை தாங்கினார். கல்வி குழுமத்தின் செயலர் மு.இ.ஹிமாயுன் கபீர், கல்லூரியின் முதல்வர் Dr.பிரகாஷ் அருள் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தலைமை அதிகாரி Dr.R.ஜெயவேல் கலந்து கொண்டு சுமார் 325 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

அப்போது பேசிய அவர்: பட்டம் பெறும் மாணவ, மாணவிகள்
அதனை நன்கு உணர்ந்து தங்களது திறனை ஆற்றலை தன் வளர்ச்சிக்காகவும், குடும்ப வளர்ச்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் செயல்படுத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர், அலுவலக நிர்வாகி, Dean, துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள் என கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
1
0
0
0
0
0