மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் 5764 என்ற எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் கடைகள் அதிக அளவில் அமைந்துள்ளதால் இங்கு உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த கோரிக்கையை விளக்கி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தை மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் அக்கட்சியினர் நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள புதுப்பட்டினம் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தினர். 

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் பாமக மாவட்ட தலைவர் பழனிசாமி, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
0
0
0
0
0