டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், தலைவர், முகமது சுகைல், செயலாளர் உதயகுமார்,  பொருளாளர் ரகுராமன், கௌரவத் தலைவர் அசோகன் மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையிலும், அதன் கிளை சங்கமான பந்தநல்லூர் அனைத்து வணிகர் நல சங்கத்தின்
ஆலோசனை கூட்டம் தலைவர் ரகுராமன் மற்றும் பொறுப்பாளர்கள் தலைமையிலும்  18ம் தேதி அன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை, பந்தநல்லூர் வரதராசு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகபர் சாதிக் மற்றும் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வணிகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தவும், வணிகர்கள் எவ்வாறு பாதுகாப்பாக    வணிகம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் கிளை சங்கமான திருப்பனந்தாள், பந்தநல்லூரில் மேலும் 10 கேமராக்கள் அதிகப்படுத்துதல் மற்றும் புதிதாக இணைய இருக்கும் 8 கிளை சங்கங்களுக்கும் 10 கண்காணிப்பு கேமரா புதிதாக பொருத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் வணிகர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என டெல்டா  வணிகர் நல சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
0
0
0
0
0