முன்னால் பிரதமர் இந்திராகாந்தியால் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனத்தை எதிர்த்து களப்பணியாற்றிய, தாராசுரம் பகுதியை சார்ந்த மனோகருக்கு, பாஜக, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்வில் மாநகர தலைவர் பொன்ராஜ் தேவர், பொதுச்செயலாளர்கள் சச்சில் சரவணன் மற்றும் வாசன் வெங்கட்ராமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.

நெருக்கடி நிலை, அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) (25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977) இந்தியாவில் 21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமதுவால், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திராகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குவதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக பார்க்கப்படுகின்றது.


பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ராஜ் நரேன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்திராகாந்தி மீது தேர்தல் நோக்கங்களுக்காக மாநில இயந்திரங்களை பயன்படுத்தியதாக தேர்தல் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். 12 ஜூன் 1975, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா ​இந்த வழக்கில் இந்திராகாந்தியை குற்றவாளியாக அறிவித்தது. மேலும் நீதிமன்றம் அத்தொகுதியில் அவரது வெற்றி செல்லாது எனவும் அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீ்க்கப்படவேண்டும் என அறிவித்தார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாதெனத் தடை விதித்தார். எனினும், லஞ்சம், அரசு அதிகாரிகளை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது, மற்றும் அரசின் மின்சாரத்தை பயன்படுத்தியது போன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிகழ்வை டைம்ஸ் நாளிதழ் போக்குவரத்து பயண சீட்டுக்காக பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என விமர்சித்தது. எனினும் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் அரசாங்க தொழிற் சங்கங்கள் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடத்தினர். ஜே. பி. நாராயண், ராஜ் நரேன், சத்யேந்திர நாராயண் சின்ஹா ​​மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மக்கள் தில்லி தெருக்களில் வெள்ளமாக போராடினர் இதனை அடுத்து பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு போன்றவை மூடப்பட்டன. இதுவே பின்னர் இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த முக்கிய காரணமாக இருந்தது.

அவசர நிலை அறிவிக்கப்பட்டபோது பெருந்தலைவர் காமராஜர், "தேசம் போச்சு தேசம் போச்சு" என்று வேதனையோடு கூறியதை அனைவரும் அறிவார்கள்.

ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் துவங்கியதும் திமுக உறுப்பினர்களாக இருந்த இரா.செழியன் மக்களவையிலும், மாரிச்சாமி மாநிலங்களவையிலும் அவசரநிலையினை எதிர்த்து கடுமையான கண்டனக் குரலை எழுப்பினர். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், 1975 ஆகஸ்ட்9,10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நெல்லை மாநாட்டிலும், அதே ஆண்டு கோவையில் டிசம்பர் 28ல் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் அவசரநிலை குறித்து தி.மு.கவின் கண்டன தீர்மானமும், கருணாநிதியின் பேச்சும் அமைந்தது.


இம்மாநாடுகளுக்குப் பிறகு, பம்பாயில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திராகாந்தி பேசும் போது, நக்சலைட் இயக்கங்கள் போன்று திமுக.வும் தடைசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அவசர நிலைகாலத்தில் 26 இயக்கங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் இந்திராகாந்தியின் தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31-நாளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஆட்சி கலைக்கப்பட்டதும் தி.மு.கவின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். முரசொலிமாறன், மு.க.ஸ்டாலின், அன்றைக்கு திமுக-வில் இருந்த வை.கோ, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எதிர்க்கட்சிகளின் அளவில்லாத எதிர்ப்புகளை நாடு முழுவதும் சந்திக்க நேர்ந்தது. இந்திரா காந்தி தனக்கு நெருக்கமானவர்கள் கூறிய ஆலோசனைகளையும் பொருட்படுத்தவில்லை;

அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். முக்கிய அரசியல் தலைவர்களான ஜெய பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி மற்றும் பல பொதுவுடமைவாதிகள், பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள், கிளர்ச்சியாளர்கள் என கருதப்பட்டவர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சாரா அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தடை செய்யபட்டன.

தகவல் கொடுக்காமல் காவலர்களால் மக்கள் கைது செய்யப்பட்டனர். கைதிகள் மற்றும் அரசியல் கைதிகள். சித்திரவதை செய்யப்பட்டனர்.

தூர்தர்ஷன் போன்ற பொது மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் தேசிய தொலைக்காட்சி வலையமைப்புகளை அரசு பிரசாரம் செய்ய பயன்படுத்திக் கொண்டது. கட்டாய கருத்தடை மற்றும் பெரிய அளவிலான சட்டவிரோத செயல்கள் அரங்கேறியது.

நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளும், செய்தி ஊடகங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, மத்திய அரசுக்கு எதிரான செய்திகள் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மத்திய அரசை ஆதரித்து அரசின் செலவில் விளம்பரமும் பிரச்சாரமும் மேற்கொண்டது.

0
0
0
0
0
0