ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர நாள்தோறும் இரண்டு விமானங்களை இயக்க அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் அனுமதித்துள்ளன.

ஆகஸ்டு 15ஆம் நாள் காபூல் நகரைத் தாலிபான்கள் கைப்பற்றிய பின் அங்குள்ள விமான நிலையத்தை அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆப்கானில் உள்ள இந்தியர்களை அழைத்துவர விமானங்களை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டது. இதையடுத்து நாள்தோறும் இரண்டு விமானங்களை இயக்க இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

0
0
0
0
0
0