கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு, பட்டீஸ்வரம் உதவி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினருக்கும் அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினரை கார்த்திகேயன் பாராட்டி பேசியதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் காவலர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
5
0
0
2
0
0