தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) யின் கீழ் உள்ள கோவில்களில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும். சத்தியப்பிரமாணம் செய்யாத ஆணையாளர் உட்பட அனைத்து அலுவலர்களையும்  இந்து சமய அறநிலையத் துறைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் எஸ். ஸ்ரீதரன் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செயதார்.

இவ்வழக்கில் ஆணையர் உதவி ஆணையர்கள் வரையுள்ள அதிகாரிகளுக்கு சத்தியப்பிரமாணம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு வாதிட்டது. அரசாங்கத்தின் வேண்டுகோளை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தமிழகம் முழுவதும் 44,121 கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது. 1961 ஆம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகள் 2-ல் கூறியுள்ள இந்து மதத்தை பின்பற்றுவதை சத்தியபிரமாணத்தின் பேரில் உறுதி கூறும் நிரூபண படிவத்தில் விதி 3ன் படி கோயில்களில் பணிபுரிவர் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதை சத்தியபிரமாணம் செய்து சாட்சிகள் முன்னிலையில் உறுதி செய்யவும் HR & CE சட்டத்தின் பிரிவு 10 ஐ மேற்கோள் காட்டியும், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர்
மார்ச் 3 ம் தேதி 2020 தீர்ப்பளித்திருந்தனர். 

அதன்படி இதுவரை சத்தியபிரமாணம் செய்யாத ஆணையர், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உட்பட துறையில் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் தாங்கள் பிறப்பால் இந்துக்கள் என்றும், தாங்கள் தொடர்ந்து இந்து மதத்தையே பின்பற்றுவதாகவும் சத்தியப் பிரமாணம் செய்து உறுதிமொழி படிவத்தில் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்து போட வேண்டும்,தவறும் பட்சத்தில் அவர்கள் பதவி இழப்பர். உத்தரவு கிடைக்கப்பெற்ற எட்டு வார காலத்திற்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து ஊழியர்களும் அவர்கள் பிறப்பால் இந்துக்கள் என்றும், அவர்கள் இப்போதும் இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்  என்றும் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.

0
0
0
0
0
0