சென்னை: “ஆட்​சி​யில் காங்​கிரசுக்கு பங்கு கொடுக்க வேண்​டும் என்ற கோரிக்​கை​யை, தி.​மு.க., தலை​மை​யிடம் தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் ஷோடங்​கர் வலி​யுறுத்தி வரு​கி​றார்,” என, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார்.

அவர் அளித்த பேட்​டி: பா.ஜ., ஆளும் மாநிலங்களில், சிறு​பான்​மை​யினர் மீது தாக்​குதல்கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. காங்​கிரசுக்கு சிக்கல் இது, இந்​திய இறை​யாண்​மையின் மீது நடத்தப்படும் தாக்​குதலுக்கு சமம். இது​போன்ற சம்​பவங்​கள் இனி நடக்​காமல் இருக்க, மத்​திய அரசு பார்த்​துக் கொள்ள வேண்​டும். வங்கதேசத்​தில் சிறு​பான்​மை​யின​ராக உள்ள ஹிந்​துக்களுக்கு பாது​காப்பு இல்​லை. 

ஆனால், அதற்கு கூட பிரதமர் மோடி கண்​டனம் தெரிவிக்​க​வில்​லை.காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் ராகுல், பிரியங்கா விரை​வில் தமிழகம் வரவுள்ளனர். பல மாநிலங்​களில், கடைசி நேரத்​தில் தொகு​தி​கள் ஒதுக்​கப்​படு​வ​தால், காங்​கிரசுக்கு சிக்​கல் ஏற்​படு​கிறது; கடைசி​யாக பீஹாரிலும் கூட அப்படித்​தான் நடந்தது. தி.​மு.க., கூட்ட​ணி​யில் இரண்டு மாதம் முன்​பே, தொகுதி பங்​கீடு குறித்து பேசி முடித்​தால்​தான், முன்​கூட்​டியே தேர்தல் பிர​சாரத்​தில் ஈடுபட முடி​யும். அதை தான் தேர்தல் பொறுப்​பாளர் என்ற முறை​யில், தி.​மு.க.,​விடம் கிரிஷ் ஷோடங்​கர் பேசி​யிருக்​கி​றார்.
சொந்த கருத்து ‘ஆட்​சி​யில் பங்​கு’ உள்​ளிட்ட விஷ​யங்​களை, தி.​மு.க.,​விடம் பேசி முடிக்க வேண்​டும் என்ற அடிப்​படை​யில் தான் ஷோடங்​கர் செயல்​பட்டு வரு​கி​றார். காங்​கிரஸ் தொகுதி பங்​கீடு பேச்சு குழு தலை​வ​ராக​வும் அவர் இருப்​ப​தால், ஆட்சி அதி​காரத்​தில் பங்கு என்ற நிலைப்​பாட்டை தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கி​றார். 

தமிழகத்​தில், ‘இண்​டி’ கூட்டணி வலிமை​யாக உள்ளது. காங்​கிரஸ் பிர​முகர் திருச்சி வேலு​சாமி த.வெ.க.,வுக்கு ஆதர​வாக பேசியது, அவருடைய சொந்த கருத்​து. முதல்​வர் ஸ்டா​லின், 80 சதவீதம் தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறை​வேற்​றி​யுள்​ளார். மீத​முள்ள வாக்​குறு​தி​களை அவர் நிச்​ச​யம் நிறை​வேற்​று​வார்’ என்றார்.
0
0
0
0
0
0