மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி கடைவீதியில் ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யா சரண்ராஜ் ஒன்றிய குழு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட குடிநீர் தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சிக்கு கோமல் ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயசுதா ரமேஷ், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் ஒன்றிய குழு துணை தலைவர் முருகப்பா கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தரைமட்ட குடிநீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஊராட்சி பொதுமக்கள் கிராமவாசிகள் திரளாக கலந்து கொண்டனர்.
1
0
0
0
0
0