லண்டன்: வங்​கதேசத்​தில் ஹிந்​துக்​கள் கொல்​லப்​படு​வதைத் தடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி பிரிட்​டனில் இந்​தி​யர்​கள் , அங்​குள்ள வங்​கதேச தூதரக அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

வங்​கதேசத்​தில் சமீப நாட்​களாக ஹிந்​துக்கள் , கிறிஸ்​தவர்​கள் உள்​ளிட்ட சிறு​பான்​மை​யினருக்கு எதி​ராக வன்​முறை சம்பவங்கள் அதிகரித்து வரு​கின்றன. சமீபத்​தில் ஹிந்து மதத்​தைச் சேர்ந்த தீபு சந்​திர தாஸ் என்ற இளைஞரை மத நிந்​தனை செய்​த​தாக அங்​குள்ள கும்​பல் மரத்​தில் தலைக்​கீழாக தொங்​க​விட்டு உயிருடன் எரித்து கொன்ற சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. தொடர்ந்து ராஜ்​பாரி மாவட்​டத்​தைச் சேர்ந்த அம்​ரித் மண்​டல் என்​பவ​ரும் அடித்​துக்​கொல்​லப்​பட்​டார்.

வங்​கதேசத்​தில் நடந்த சம்​பவத்​திற்கு மத்​திய அரசு கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. ஹிந்து மக்​களுக்கு ஆதர​வாக டெல்​லி​யில் வங்​கதேச தூதரகத்தை முற்​றுகை​யிட்டு இந்​திய மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த நிலை​யில், வங்​கதேசத்​தில் சிறு​பான்​மை​யின​மான ஹிந்​துக்​கள் கொல்​லப்​பட்ட சம்​பவத்தை கண்​டித்து பிரிட்​டனின் லண்​டனில் உள்ள வங்​கதேச தூதரக அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு இந்​திய வம்​சாவளி மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது, வங்​கதேசத்​தின் தேசிய கீத​மான’ அமர் ஷோனர் பங்​களா’வை இசைத்து சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான வன்​முறையை நிறுத்​தக் கோரி கோஷங்​களை எழுப்​பினர்

முன்​ன​தாக ஹிந்​துக்​களுக்கு ஆதர​வாக நேபாளத்​தின் பல்​வேறு பகு​தி​களி​லும் போ​ராட்​டம்​ நடத்​தப்​பட்​டது.
12
20
0
1
0
0