டெல்லி: 2026ம் ஆண்டு ஏப்​ரல், ஜூன், நவம்​பர் மாதங்​களில், 75 மாநிலங்​களவை இடங்​களுக்​கான பதவி​கள் காலி​யா​வ​தால் புதிய உறுப்​பினர்​களுக்கு தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது. அசாம், கேரளா, தமிழ்​நாடு, மேற்கு வங்​கம் மற்​றும் புதுச்​சேரி ஆகிய மாநிலங்​களில் அடுத்​தாண்டு சட்​டமன்ற தேர்​தல் நடை​பெற இருக்​கிறது. இந்​நிலை​யில், ஏப்​ரல், ஜூன், நவம்​பர் மாதங்​களில், 75 மாநிலங்​களவை இடங்​களுக்​கான பதவி​களும் காலி​யாகிறது.

உத்​தரப்​பிரதேசத்​தில் 10 இடங்​களும், பீகாரில் 5 இடங்​களும், மகா​ராஷ்டி​ரா​வில் 7 இடங்​களும் காலி​யாக போகும் நிலை​யில், மத்​தி​யப்​பிரதேசம், அசாம், அருணாச்​சலபிரதேசம், மேகால​யா, மணிப்​பூர், மிசோரம், உத்​தர​காண்ட், இமாச்​சலபிரதேசம், ராஜஸ்​தான், சட்​டீஸ்​கர், ஜார்க்​கண்ட், ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, மேற்கு வங்​காளம், தமிழ்​நாடு மற்​றும் பல வடகிழக்கு மாநிலங்​களி​லும் இடங்​கள் காலி​யாக உள்​ளன.

2026ம் ஆண்டு பதவிக்​காலம் முடிவடை​யும் மூத்த தலை​வர்​களில் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, முன்​னாள் பிரதமர் எச்​.டி.தேவக​வு​டா, திக்​விஜய சிங், சரத் பவார், ஒன்​றிய அமைச்​சர்​கள் ஹர்​தீப் சிங் பூரி, பி.எல்​.வர்​மா, ரவ்​னீத் சிங் பிட்டு மற்​றும் ஜார்ஜ் குரியன் ஆகி​யோர் அடங்​கு​வர். இவர்​கள், மீண்​டும் நாடாளு​மன்​றத்​திற்கு வரு​வார்​களா அல்​லது புதி​ய​வர்​களால் மாற்​றப்​படு​வார்​களா என்​பது தேர்​தல் நேரத்​தின்​போதே தெரிய​வ​ரும். தற்​போது மாநிலங்​களவை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி 129 இடங்​களை​யும், இந்​தியா கூட்​ட​ணி 78 இடங்​களை​யும்​ கொண்​டுள்​ளன.
0
0
0
0
0
0